Thursday, May 22

நித்தம் நித்தம் நினைகையில்



இமையெனும் வில்கொண்டு
பார்வையில் அஸ்திரம் ஏந்துகிறாயே ..!

கர்ணன் கவசம் தோற்கும் 
உன் நேசதிற்கு முன் நான் எம்மாத்திரம்..!

*****

பிரம்மன் தீட்டிய காகிதமல்ல நீ..!
பிரம்மனுக்காக தீட்டப்பட்ட தூரிகை நீ..!

*****

வீதியில் விலாசம்
தேடிய அவளின் 
விலாசம் நானென்று யார் சொல்வது ..!

*****

நித்தம் நித்தம் 
நினைகையில் விக்குதடி
உனக்கு..!

முத்தம் கூட பத்தலடி
விக்குதடி உனக்கு..!

போதுமென விட்டு விட்டு
போகாதே விக்குமடி உனக்கு.! 

எட்டி வந்து தீர்த்தாலும் 
விக்குமடி உனக்கு..!

****

எங்கிருந்தோ பறந்து 
என்னை உரசுகையில் 
நானும் பறக்கவே நினைக்கிறேன்
அழைத்து செல்வாயா..?

0 comments:

 
;